Thursday, December 16, 2021

ஆதாரநிலயோSதாதா

ஆதா4ரநிலயோ தா4தா புஷ்பஹாஸ: ப்ரஜாக3ர: | 
ஊர்த்4வக3: ஸத்பதா2சார: ப்ராணத3: ப்ரணவ: பண: || 


ஆதாரநிலய: - சாதுக்கள் இருப்பதால்தான் உலகம் நிலைபெறுகிறது. அந்தச் சாதுக்களுக்கும் ஆதாரமாக இருப்பவர் ஆகையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஆதாரநிலய: என்று போற்றப்படுகிறார். 

(அ)தாதா - ஆதாரமாய் இருக்கும் நெறிகளைத் தாமே உபதேசித்தும், தாமே நடத்திக் காட்டியும் தாங்குபவராயும், தம்மை ஒருவர் தாங்குதல் அற்றவராயும் உள்ளவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தாதா என்னப்படுகிறார். 

புஷ்பஹாஸ: -- பூவிரிவது போல் புவனம் படைப்பவன்; பூவிரிந்து மணம் பரப்புவது போல் பக்தர்களின் உள்ளத்தில் மணப்பவன் 

ப்ரஜாகர: -- வயலை உழவன் விழித்திருந்து நோக்குவது போல் உயிர்களை உறங்காமல் காப்பவன் 

ஊர்த்வக: -- உலகளந்த உத்தமனாய் இருப்பதால் உறங்காது உலகம் காக்கின்றான் 

ஸத்பதாசார: -- பக்தர்களை எப்பொழுதும் முக்திக்கான சாதனங்களில் முனைப்பு கொள்ளச் செய்பவன் 

ப்ராணத: -- உலகத் துயர்களில் உழலும் ஜீவர்களைக் காப்பாற்றி உயிர் தருபவன் 

ப்ரணவ: -- ப்ரணவத்தைப் போதிப்பதன் மூலம் தனக்கும் ஜீவனுக்கும் உள்ள நித்யமான உறவை உணர்த்தித் தனக்கு என்றும் ஜீவன் சேஷமானது என்னும் ஞானத்தைத் தருபவன்; அவனும் ப்ரணவமும் ஒன்றே. 

பண: -- பக்தர்களிடம் சில சமயம் அவர்களைத் தனக்கு மேல் வைத்து அவர்களுக்கு அடங்கி நடப்பது போன்ற லீலைகளைச் செய்பவர். 

***

No comments:

Post a Comment