Sunday, December 5, 2021

காலநேமிநிஹா சௌரி:

காலநேமிநிஹா சௌரி: சூர: சூரஜநேச்வர: | 
த்ரிலோகாத்மா த்ரிலோகே: கேவ: கேசிஹா ஹரி: || 


காலநேமிநிஹா -- அர்ச்சாவதாரமாகக் கோயிலில் எழுந்தருளிப் பக்தர்களின் காலதோஷத்தாலும், அறியாமையினாலும் ஏற்படும் தோஷங்களைப் போக்குகிறார் 

சூர: சௌரி: -- ராமரும் கிருஷ்ணருமாக வந்தவர் 

சூரஜநேச்வர: -- சூரர்களின் கூட்டங்களுக்குத் தலைவர் 

த்ரிலோகாத்மா -- பக்தர்களுக்கு அருள்பாலிக்க மூவுலகிலும் உள்ளுயிராய்ச் சஞ்சரிப்பவர் 

த்ரிலோகேச: -- மூவுலகங்களையும் நியமித்தபடி இருக்கும் ஈச்வரர் 

கேசவ: -- க என்னும் பிரம்மனையும், ஈச: என்னும் சிவனையும் தம் சரீரமாகவே கொண்டு காட்சி தருபவர் 

கேசிஹா -- கேசி என்னும் அசுரனைக் கொன்றவர் 

ஹரி: -- கோவர்த்தன மலையில் அழகிய வண்ணத்துடன் அமர்ந்து பக்தர்களின் பாபங்களைப் போக்கி அவர்களின் பூஜையை ஏற்று அருள்பவர் 

***

No comments:

Post a Comment