Sunday, December 12, 2021

பூதாவாஸோ வாஸுதேவ:

பூ4தாவாஸோ வாஸுதே3வ: ஸர்வாஸுநிலயோSநல: | 
த3ர்பஹா த3ர்பதோ3Sத்3ருப்தோ து3ர்த4ரோSதா2பராஜித: || 


பூதாவாஸ: -- தம்மிடத்திலேயே அனைத்து உயிர்களும் இருந்து வாழ்ந்து இலயிக்கும்படியாக இருப்பவர் 

வாஸுதேவ: -- அனைத்து உலகையும் தம் மாயையால் மூடியிருப்பவர்; விசித்ரமான மாயையால் வஸுதேவர்க்கு நன்மகவாய்த் தோன்றியவர் 

ஸார்வாஸுநிலய: -- அனைத்துப் பிராணன்களுக்கும் உயிராய் இருப்பவர்; கோகுலத்தில் ஆயர்களால் தங்கள் உயிராகக் கொண்டு அன்பு செலுத்தப்பட்டவர் 

அநல: -- பக்தர்களுக்கு அருள்வதில் போதும் என்ற மனம் ஏற்படாதவர் 

தர்பஹா -- தேவர்களும் தங்களைத் தாங்களே தருக்கிக் கொண்டு வரும்பொழுது அதை அடக்குபவர் 

தர்பத: -- பக்தர்களுக்கு அன்பின் உரிமையால் ஏற்படும் கர்வத்தைக் கண்டு இரசிப்பவர் 

த்ருப்த: -- உலகியலில் மூழ்கிப் போகும் ஒரு ஜீவன் அதனின்றும் விலகித் தன்னை வந்து சரணடையும் போது அதில் மிகவும் மகிழ்ந்து பெருமிதமும், கர்வமும் கொள்பவர் 

துர்தர: -- மனம் வாக்குக்கு எட்டா மறைபொருளாய் இருந்தாலும் பக்தியுடன் தியானிக்கும் யோகியர்க்குத் தம்மைத் தியானத்தில் உணரும்படி வைப்பவர்; ஆயர்பாடியில் யார் கையிலும் சிக்காத குழந்தையாக லீலைகள் புரிந்தாலும் கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயர் 

அபராஜித: - தம்மைப் பக்தியுடன் போற்றும் அடியார்க்கு உட்பகையாலோ வெளிப்பகையாலோ வெல்லமுடியாத நிலையைத் தருபவர் 

***

No comments:

Post a Comment