Thursday, December 16, 2021

பூர்புவ: ஸ்வஸ்தருஸ்தார:

பூ4ர்பு4வ: ஸ்வஸ்தருஸ்தார: ஸவிதா ப்ரபிதாமஹ: | 
யக்ஞோ யக்ஞபதிர் யஜ்வா யக்ஞாங்கோ3 யக்ஞவாஹந: || 


பூர்புவ: ஸ்வஸ்தரு: -- பூமி, புவர்லோகம், ஸுவர்லோகம் என்னும் மூவுலகிலும் ஜீவர்கள் தம்தம் கர்மங்களினால் உந்தப்பட்டுப் பிறப்பு இறப்பு என்ற மாற்றங்களுக்கு ஆட்பட்டுத் திரிவது பறவைகள் கிளைக்குக் கிளை பறந்து திரிவதைப் போன்றது ஆகும். ஜீவர்களாகிய பறவைகள் தங்கி இளைப்பாறும் தருவாக, மரமாக இருப்பவர் ஸ்ரீமஹாவிஷ்ணுவே. 

தார: -- ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பவர் ஆகையால் தார: 

ஸவிதா -- அனைத்து உலகங்களையும் படைத்தவர் ஆகையால் ஸவிதா 

ப்ரபிதாமஹ: -- பிதாமஹர் ஆகிய பிரம்மனையும் படைத்தவர் ஆகையால் ப்ரபிதாமஹ: 

யக்ஞ: -- தாமே யக்ஞ ரூபமாக நின்று பக்தர்களுக்குப் பலன்களைத் தருகிறார் 

யக்ஞபதி: -- யக்ஞத்தின் ஸ்வாமி அவரே 

யஜ்வா -- அவரே யக்ஞம் இயற்றுவோரின் உள்ளே அந்தர்யாமியாக இருப்பதால் அவரே யஜமானர் (யக்ஞம் இயற்றுவோர்) என்று அறியப்படுகிறார். 

யக்ஞாங்க: -- யக்ஞத்தையே தம் சரீரமாகக் கொண்ட யக்ஞ வராஹர்; துணையாகச் செய்யப்படும் வேள்விகளும் தாமே ஆனவர். 

யக்ஞவாஹந: -- சரீரம் நல்லபடியாக இருந்தால்தான் எந்த அறமும் இயற்ற முடியும். அதுபோல் யக்ஞங்கள், ஆத்ம சாதனங்கள் எல்லாம் இயற்கை, ஆரோக்கியம், சூழ்நிலை என்று பலவிதமான காரணங்கள் நன்கு அமையப் பெற்றால்தான் நடைபெற்றுப் பலன்களை அடையலாகும். அந்தக் காரணங்கள் உட்பட அனைத்திற்கும் அவர் அருள் இருந்தால்தான் நடக்கும் என்பதால் அவரே யக்ஞத்தைச் சுமந்து செலுத்தி, நடைபெற வைத்து, பூர்த்தியாக ஆக்கிப் பலன்களையும் தருகிறார் என்பதால் அவரே யக்ஞவாஹனம் எனப்படுகிறார். 

***

1 comment:

  1. No words great work and great help to others who are interested in Sahasranama
    Om Namo narayana

    ReplyDelete