Thursday, December 2, 2021

உதீர்ண: ஸர்வதச்சக்ஷு:

உதீ3ர்ண: ஸர்வதச்சக்ஷுரநீ: சாச்வதஸ்ஸ்தி2ர: | 
பூ4யோ பூ4ஷணோ பூ4தி: அசோக: சோகநாந: || 


உதீர்ண: -- தம் எளிவரும் இயல்பினாலும், எல்லையில்லாக் கருணையினாலும் பக்தர்களுக்குக் கட்கண்ணால் காணவும் தம்மை வெளிப்படுத்துகிறார் 

ஸர்வதச்சக்ஷு: -- அவருடைய அளவிலாக் கருணையால் அனைவரும் காணலாம்படி கோவில்களில் அர்ச்சா மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். 

(மிக உயர்ந்த பரம்பொருளை எப்படி நாம் அணுகுவது என்ற பக்தர்களின் சந்தேகத்தை முற்றிலும் நீக்குகிறார் என்ற திருநாமமான சின்னஸம்சய: என்பதற்கு விளக்கம் இந்த நாமம். கண்ணுக்கு விஷயமாகும் ஒன்றில் ஐயங்களே ஏற்பட முடியாதன்றோ!) 

அநீச: -- அவ்வாறு கோவில்களில் காட்சி தரும்பொழுது தம்முடைய ஈச்வரத் தன்மையை முற்றிலும் அடக்கிக்கொண்டு பக்தர்களின் இஷ்டத்திற்கு முற்றிலும் சார்ந்தவராய்த் தம்மை வைத்துக் கொள்கிறார் 

சாச்வதஸ்ஸ்திர: -- கோவில்களிலும் அர்ச்சா மூர்த்திகளில் பக்தர்களைச் சார்ந்தவண்ணம் தம்மை அவர் நிறுத்திக் கொண்டாலும், நித்யவிபூதியில் என்ன ஸ்வரூபத்தோடு எழுந்தருளியுள்ளாரோ அந்த ஸ்வரூபத்தில் சிறிதும் மாற்றமின்றியே நிலையாக எழுந்தருளியுள்ளார் 

பூசய: -- தரிசனம் தந்து மறைந்துவிடும் சமாதிநிலை போலன்றி, கண்காணச் சிலகாலம் இருந்து பின் மறைந்துவிடும் அவதாரம் போலன்றி, இருப்பதையே காணமுடியாத பரத்துவ நிலை போலன்றி, இருந்தாலும் ஒளிந்துகொண்டிருக்கும் அந்தர்யாமி நிலை போலன்றி என்றென்றும் மாறாது, மறையாது காட்சிதரும் அர்ச்சாமூர்த்தியாக இருப்பவர். அதுவும் என்றும் உங்களை விட்டுப் பிரியேன் என்று சொல்வது போல் கோவில்களில் படுத்த திருக்கோலத்தில் காட்சி தருபவர் 

பூஷண: -- தம் அவதாரங்களால் புவிக்கு அணிகலனாய் இருப்பவர்; அர்ச்சா மூர்த்தியாய் எழுந்தருளிப் பக்தர்கள் தரும் அணிகளையும் ஏற்றுக் காட்சி தருபவர். 

பூதி: -- நிதியினைப் பவளத் தூணை என்றபடிப் பக்தர்களுக்கு அனைத்துவிதச் செல்வமாகவும் இருப்பவர் 

அசோக: -- கதியற்றவர்களைக் காப்பவர் ஆகையால் சோகமே அண்டாதவராய் இருக்கிறார் 

சோகநாசந: -- தம்மைக் காணாது துயருறுவோர் யாராயினும் அவர்தம் சோகத்தைத் தவறாமல் போக்கியருள்பவர் 

***

No comments:

Post a Comment