Friday, December 17, 2021

சங்கப்ருந்நந்தகீ சக்ரீ

ங்க2ப்4ருந்நந்த3கீ சக்ரீ சார்ங்க3த4ந்வா கதா3த4ர: | 
ரதா2ங்க3பாணிரக்ஷோப்4ய: ஸர்வப்ரஹரணாயுத4: || 
 
ஸர்வப்ரஹரணாயுத4 ஓம் நம:


சங்கப்ருத் -- பிரகிருதி தத்வத்தையே சங்கமாகக் கொண்டு தரிக்கிறார் 

நந்தகீ -- வித்யைகளின் முழுத்தொகுதியான நந்தகி என்னும் வாளைத் தரிப்பவர் 

சக்ரீ -- மனம் என்னும் தத்துவத்தையே சக்ரமாகத் தரிக்கிறார் 

சார்ங்கதந்வா -- இந்திரியங்கள் எல்லாம் எழுகின்ற மூலமான அகங்கார தத்துவத்தைச் சார்ங்கம் என்னும் வில்லாகத் தரிக்கிறார் 

கதாதர: -- புத்தி தத்துவம் என்னும் கௌமோதகீ என்னும் கதையைத் தரிக்கிறார் 

ரதாங்கபாணி: -- ரதத்தின் அங்கமான தேர்ச்சக்கிரத்தை அன்றோ கையிலேந்திச் சுழட்டியபடி அன்று என்னை நோக்கி வந்தார் இந்தத் தேவகீநந்தனர்! 

அக்ஷோப்ய: -- சரணாகதி அடைந்தவர்களைக் காத்தே தீருவது என்னும் அவருடைய தீர்மானமான உறுதியை அவர் தம்மாலும் கூட அசைக்க முடியாது என்பதால் அவர் அக்ஷோப்யர் 

ஸர்வப்ரஹரணாயுத: -- இந்த ஆயுதம்தான் என்று இல்லாமல் கணக்கற்ற ஆயுதங்கள் உடையவர். அதுமட்டுமின்றி எதையும் எந்நேரத்தும் எவ்வாறும் ஆயுதமாக ஆக்கிக்கொள்ளும் வல்லபர். 

மீண்டும் ஸர்வப்ரஹரணாயுத: என்னும் நாமத்தைச் சொல்வதால் மிக உயர்ந்த கிரந்தமான ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் நிறைவு அடைகிறது என்பதைக் காட்டுகிறது. ஓம் என்னும் பிரணவத்தைச் சொல்லுவதால் ஸர்வமங்களமும் உண்டாவதைக் குறிக்கிறது. நம: என்று சொல்லி முடிப்பதால் திருமாலைச் சரணடைந்தோம் என்பதற்கு அடையாளமாக நம்மால் செய்யலாகும் அனுஷ்டானம் நம: என்னும் கைகூப்புச் செய்கையே என்பது உணர்த்தப் படுகிறது. ஸ்ரீவைகுண்டத்திலும் நித்யசூரிகளும் கூட எப்பொழுதும் நம: நம: என்று கைகூப்பியவண்ணம் திகைத்துப் பார்த்தவண்ணம் நிற்கின்றனர் என்று சுருதியே முழங்குகிறது. 

***

No comments:

Post a Comment