Thursday, December 16, 2021

சதுர்மூர்த்திர் சதுர்பாஹு:

சதுர்மூர்த்திர்சதுர்பா3ஹுச் சதுர்வ்யூஹச் சதுர்க3தி: | 
சதுராத்மா சதுர்பா4வச்சதுர்வேத3 விதே3கபாத் || 


சதுர்மூர்த்தி: -- விராட், ஸூத்ராத்மா, அவ்யாக்ருதர், துரீயர் என்னும் நான்கு வடிவினர்; வாஸுதேவனாகிய தாம், பலராமர், ருக்மிணியின் புதல்வராகிய ப்ரத்யும்னர், ப்ரத்யும்னரின் குமாரனாகிய அரவிந்தன் என்ற நான்கு பேர்களால் நான்கு வியூஹங்களை உணர்த்தி நிற்பவர்; வெள்ளை, சிகப்பு, மஞ்சள், கருநீலம் என்னும் வண்ணங்களால் சுட்டப்படுபவர் 

சதுர்பாஹு: -- நான்கு தோளும் திகழ அவதரித்த ஸ்ரீகிருஷ்ணர் 

சதுர்வ்யூஹ: -- நான்கு வ்யூஹ அவதாரங்களாகத் திகழ்பவர் 

சதுர்கதி: -- நான்கு புருஷார்த்தங்களான தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பதற்கான நான்கு வழிகளாகவும், இந்த்ரபதம், ப்ரம்மாபதம், கைவல்யம், மோக்ஷம் என்னும் நான்கு விதப் பலன்களை உத்தேசித்து அமையும் வழிகள் நான்காகவும் தாமே அமைந்தவர் 

சதுராத்மா -- விழிப்பு, கனவு, துயில், துரியம் என்னும் நான்கு நிலைகளிலும் ஸ்தூலமாகவும், சூக்ஷ்மமாகவும் உள்ளுயிராய் இருப்பவர் 

சதுர்பாவ: -- நான்கு வியூஹங்களில் நான்கு வித பாவங்களோடு உலகைக் காப்பவர் 

சதுர்வேதவித் -- நான்கு வேதங்களின் தாத்பர்யமாகவும் இருப்பவர் 

ஏகபாத் -- ஜீவர்களால் சரணடையத் தக்க ஒரே புகலாக இருப்பவர் 

***

No comments:

Post a Comment