Thursday, December 16, 2021

அநந்தரூபோSனந்தஸ்ரீ:

அநந்தரூபோSனந்தஸ்ரீர் ஜிதமன்யுர் ப4யாபஹ: | 
சதுரச்ரோ க3பீ4ராத்மா விதி3சோ வ்யாதி3சோ தி3: || 


அநந்தரூப: - தமது பக்தர்கள் எந்த ரூபத்தில் தம்மைக் காண வேட்கிறார்களோ அவ்வித ரூபத்தில் எல்லாம் தாம் தோன்றி அவர்களுக்கு அருள்பாலிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநந்தரூப: என்று கொண்டடப்படுகிறார். 

அநந்தஸ்ரீ: - தமது அடியார்களுக்கு உரிய செல்வங்கள் அனைத்தையும் அளவில்லாது வழங்கும் தன்மையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநந்தஸ்ரீ: என்று போற்றப் படுகிறார். 

ஜிதமன்யு: - தீயவர்களிடத்தும் சினம் காவாமல் அவர்களிடம் உள்ள தீய குணத்தை அகற்றி அவர்களும் நல்வழி அடைந்து உய்யும் வழிவகைகளைச் செய்வதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜிதமன்யு: என்று அழைக்கப் படுகிறார். 

பயாபஹ: - தாம் எப்பொழுதும் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதுடன் ஜீவர்களுக்கு ஏற்படுவதான தாங்கள் ஒரு நாதனற்ற அநாதைகளோ என்ற பயத்தையும் நீக்கிக் காப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பயாபஹ: என்று போற்றப்படுகிறார். 

சதுரச்ர: - என்றும் எதற்கும் உசிதமானவற்றையே செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சதுரச்ர; என்று சொல்லப்படுகிறார். 

கபீராத்மா - இவ்வளவினர் என்று யாவராலும் அறியக் கூடாத ஸ்வரூபம் உள்ளவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கபீராத்மா என்று போற்றப் படுகிறார். 

விதிச: - எவ்வளவு உயர்ந்தோராயினும் தம்மை எத்தனை காலம் எவ்வளவு முயன்று துதித்தாலும் அந்தத் துதிக்கெல்லாம் எட்டாத சிறப்புகளும் மகிமையும் கொண்டவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விதிச: என்று போற்றப்படுகிறார். 

வ்யாதிச: - அவரவர்க்கு உரிய சிறப்புகளை அளித்து, உரிய அதிகாரங்களைத் தந்து, அவரவர்க்கு உரிய பலன்களையும் நியதியாகப் பெற நியமிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வ்யாதிச: என்று சொல்லப்படுகிறார். 

திச: - அவரவர்க்கு உரிய நிலையிலும், தகுதியிலும் நிறுத்தி உயிர்களைப் பூரணமாக மலரச் செய்கிறார் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் திச: என்று சொல்லப்படுகிறார். 

***

No comments:

Post a Comment