Saturday, December 11, 2021

ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா

ஸத்3க3தி: ஸத்க்ருதி: ஸத்தா ஸத்3பூ4தி: ஸத்பராயண: | 
சூரஸேநோ யது3ச்ரேஷ்ட2: ஸந்நிவாஸ: ஸுயாமுன: || 


ஸத்கதி: -- மயர்வற மதிநலம் அளித்து அடியார்களை உயர்ந்த பேற்றை அடையச் செய்பவர் 

ஸத்க்ருதி: -- பக்தர்கள் நினைத்து மகிழ்ந்து உய்வடைய வேண்டி அவதாரங்கள் எடுத்துப் பல தெய்விகச் செயல்களைச் செய்பவர் 

ஸத்தா -- அனைத்து உயிர்களுக்கும் உயிர்நிலையாயும், சாதுக்களுக்குத் தாங்கி நிற்கும் உயிராகவும் இருப்பவர் 

ஸத்பூதி: -- பக்தர்களுக்குத் தாயாய்த் தந்தையாய் உறவாய்ச் சுற்றமாய் நட்பாய் எல்லாமும் ஆனவர் 

ஸத்பராயண: -- தெளிந்த ஞானிகளுக்கு உற்ற பெரும் புகலாய் இருப்பவர் 

சூரஸேந: -- தீமையை அகற்றி நன்மையை நிலைநாட்ட தீரர்களைத் தம்மைச் சூழ உடையவர் 

யதுச்ரேஷ்ட: -- யதுகுலத்தில் உலகுய்யப் பிறந்த ஸ்ரீகிருஷ்ணர் 

ஸந்நிவாஸ: -- ஞானியர்க்கு என்றும் உற்ற நிலையாய் இருப்பவர் 

ஸுயாமுன: -- யமுனை நதிக்கரையில் விண்ணகத்தை மண்ணகத்தில் நட்டது போல் திகழச் செய்தவர் 

***

No comments:

Post a Comment