Friday, December 17, 2021

ஆத்மயோநி: ஸ்வயம்ஜாதோ

ஆத்மயோநி: ஸ்வயம்ஜாதோ வைகா2ந: ஸாமகா3யன: | 
தே3வகீநந்த3ன: ஸ்ரஷ்டா க்ஷிதீ: பாபநாந: || 


ஆத்மயோநி: -- உலகின் அடிப்படைக் காரணமும் அவரே; பக்தர்களுடன் பாலில் இனிப்பு போல் கலந்து பழகும் பண்பினர் 

ஸ்வயம்ஜாத: -- உலகின் நிமித்த காரணமும் அவரே; பக்தர்களின் பிரார்த்தனைகள் இல்லாமலும் சில சமயம் அவரே அவதாரம் எடுக்கின்றார் 

வைகாந: -- அவர் அருளால் ஜீவன் முக்தி அடையும் பொழுது பவநோய் என்பது இருந்த சுவடே தெரியாமல் அகழ்ந்து அகற்றப்பட்டு விடுகிறது. 

ஸாமகாயந: -- அழுகையில் புதைந்திருந்த ஜீவர்கள் முக்தியில் ஆனந்தத்தில் முழுகிப் பாடி உகக்கும்படி ஆக்குகின்றார் 

தேவகீநந்தன: -- இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருந்த திவ்ய நாமங்கள் எல்லாம் இதோ இங்கே நின்று கொண்டிருக்கும் இந்தத் தேவகீ நந்தனனைக் குறித்துத்தான் என்பதை அறிவாயாக 

ஸ்ரஷ்டா -- உங்கள் உறவினன் போலும், நண்பன் போலும் இருக்கும் இந்தத் தேவகீநந்தனனே உலகைப் படைத்தவன். இதுவே உண்மை. 

க்ஷிதீச: -- புவியின் தலைவன் இவனே. எனவேதான் பூமியின் துயர் தீர்க்க அவதரித்துள்ளான். 

பாபநாசந: -- அவனை நினைத்தாலே போதும். பாபங்கள் பறந்தோடும். 

***

No comments:

Post a Comment