Friday, December 17, 2021

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கற்பதால் விளையும் பலன்கள்

கேசவனின் புகழ் பாடும் ஆயிர நாமங்கள் இவை. திவ்யத்தின் திரட்டு இவை. இவற்றைப் பாடினாலோ, கேட்டாலோ இவ்வுலகிலும் மற்று அவ்வுலகிலும் அசுபம் என்பது சிறிதும் நெருங்க இயலாது. வாழ்க்கையில் பல தொழில்களில் உள்ளோரும் இதனால் பலன் பெறுகின்றனர். பல நோக்குகள் உள்ளோரும் தம் தம் நோக்கத்தில் இதனால் வெற்றி பெறுகின்றனர். அறிவு மற்றும் ஞானம் குறித்து முனைபவர்களுக்குத் தெளிந்த தத்துவ ஞானம் ஏற்படுகிறது. உலக வாழ்க்கையில் நியாயமான முறையில் சிறக்க வேண்டும், நல்ல ஆட்சியாளர்களாக வெற்றி பெற வேண்டும்; நல்ல வியாபாரிகளாகச் செழிக்க வேண்டும்; அலுவலகப் பணிகளில் நல்ல வளர்ச்சியும், சந்தோஷமும் அடைய வேண்டும் என்பவர்களுக்கு இந்த ஆயிர நாமம் கற்பதால் நல்ல பலன் உண்டாகிறது. நல்ல புகழ், கீர்த்தி, பெருமை முதலியன இதைக் கற்பவர்களுக்கு உண்டாகின்றன. நோயிலிருந்து விடுதலை; பயத்திலிருந்து விடுதலை; ஆபத்திலிருந்து விடுதலை; மனத்துயர்களினின்றும் விடுதலை இவையெல்லாம் இதைக் கற்பதால் விளைகின்றன. தினமும் பக்தியுடன் ஆயிர நாமங்களால் துதிப்பவர் பல இடர்ப்பாடுகளையும் கடக்கின்றனர். வாஸுதேவனைச் சரணடைந்து வழிபடும் மனிதர் அனைத்துப் பாங்களினின்றும் விடுபட்டு என்றும் நிலைத்த பெருநிலையான பிரம்மத்திடமே செல்கின்றனர். 

ந வாஸுதே3வ ப4க்தாநாம் அசுப4ம் வித்3யதே க்வசித் | 
ஜன்மம்ருத்யு ஜரா வ்யாதி4ப4யம் நைவோபஜாயதே || 

வாஸுதேவனின் பக்தர்கள் அசுபம் என்றால் என்ன என்றே அறியார்கள். அவர்களுக்கு பிறப்பால் பயம், இறப்பால் பயம், முதுமையால் பயம், வியாதியினால் பயம் என்பவை ஒரு நாளும் உண்டாகா. 

புருஷோத்தமனின் பக்தர்கள் எப்படி இருப்பார்கள்? 

அவர்களிடம் குரோதம் இருக்காது; மாச்சரியம் என்பது இருக்காது; லோபத்தனம் இருக்காது; நன்மையற்ற மதி என்பது இருக்காது. மாறாகப் பலவித புண்ணியங்களும் அவர்களிடத்தே ஒருங்கு திகழும். அப்படி இருப்போரே புருஷோத்தமனின் பக்தர்கள் ஆவர். 

என்ன கஷ்டம் இருந்தாலும், என்ன இடைஞ்சல்கள் இருந்தாலும், என்ன வியாதிகள் இருந்தாலும், மனக்கிலேசங்கள் இருந்தாலும் ’நாராயண’ என்னும் நாமத்தை உச்சரிப்பதால் அத்தனை துக்கங்களும் விடுபட்டுச் சுகம் ஏற்படுகிறது. 

காயேன வாசா மனஸேந்த்3ரியைர்வா 
பு3த்3த்4யாSSத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபா4வாத் | 
கரோமி யத்3யத் ஸகலம் பரஸ்மை 
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி || 

உடலால், வாக்கால், மனத்தால், இந்திரியங்களால், புத்தியால், என்னால் நானாகவோ அல்லது பிரகிருதியின் சுபாவத்தாலோ எதை எதைச் செய்கிறேனோ அனைத்தையும் நாராயணனுக்கே பரமாகச் சமர்ப்பித்து விடுகிறேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

11 comments:

  1. தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். நமது கலாச்சாரம் வளர இது ஒரு வழிகாட்டல்

    ReplyDelete
  2. இந்த மிக உன்னதமான கடினமான விளக்கத்தை மிக எளிதாக புரியும் வண்ணம் எழுதி தவறின்றி பிரசூரித்து தந்த அன்பரின் பொற்பாதங்களை வணங்குகிறேன். எத்தனை புகழ்ந்தாலும் தகும் என்ற போதிலும் சூரியனுக்கு கற்பூர ஆரத்தி காட்டுவது போல,கங்கை நதியை குளிப்பாட்டி புனதமாக்குவது போல என்பதால் முடிக்கிறேன். வணக்கங்கள் பல.

    ReplyDelete
  3. நாமங்கள் ஆயிரம் கொண்ட நாராயணா,
    உனை நாள்தோறும் போற்றி பாடி பணிகின்றோம்.🙏🙏

    ReplyDelete
  4. I find no words to express my gratitude for your excellent work done ❣️❣️❣️ you have no choice but to enjoy the Blissfulness of the same what we all enjoy. Pranams.

    ReplyDelete
  5. A very very useful CONTRIBUTION f

    ReplyDelete
  6. உன்னதமான இறை பணி,எங்கும் நலம் உண்டாகட்டும்,வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  7. Thank you for the excellent explanation. God bless you

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள விளக்கம்
    மிகவும் நன்றாக இருக்கிறது
    நன்றி
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  9. மிகவும் அருமை. மிக்க நன்றி

    ReplyDelete
  10. EXCELLENT. NARAYANAN BLESS YOU...

    ReplyDelete