Tuesday, December 14, 2021

ஏகோ நைக: ஸவ: க:

ஏகோ நைக: ஸவ: க: கிம் யத்தத் பத3மநுத்தமம் | 
லோகப3ந்து4ர் லோகநாதோ2 மாத4வோ ப4க்தவத்ஸல: || 


ஏக: -- ஒத்தாரும் மிக்காரும் இல்லாத ஒருவன் 

நைக: -- அவன் ஒருவனே எனினும் பல்கிய உயிர்களிலும் பொருட்களிலும் உள்ளே உள்ளுயிராய்ப் பரந்து நிற்பவனும் அவனே 

ஸவ: -- மானிடமாய் வந்து ஸ்ரீகிருஷ்ணனாய்க் குழந்தைகளும் உரிமை கொண்டாடத் திரிந்தவன் அவனே; உடல்மிசை உயிரென உயிர்கள் அனைத்தினுள்ளும் உள்ளுயிராய் என்றும் இருப்பவனும் அவனே (ஸ;, வ: ) 

க: -- ஒளிவளர் ஆனந்தமாய் எங்கும் நிறைந்தவன் (அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி) 

கிம் -- எவனைத் தேட வேண்டும், எவனையே அறிய வேண்டும் என்று மறை புகலுமோ அவன் 

யத் -- ஜீவர்கள் அஞ்ஞான இருளில் முழுகிக் கிடந்த காலத்தே தொடங்கி அவர்கள் முக்திக்காக எவன் முனைந்தவண்னம் இருக்கின்றானோ அவன் 

தத் -- மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன் 

பதம் அநுத்தமம் -- உயர்வற உயர்நலம் என்றும், பரமம் பதம் என்றும் மறைகள் புகலும் மிக்குயர் பேறு அவன் 

லோகபந்து: -- உயிர்களுக்கு உறவுகள் அனைத்துமாய் ஆனவன் 

லோகநாத: -- உயிர்களை உடையோனும், உயிர்களை வழிநடத்துவோனும் அவனே 

மாதவ: -- தண்ணளி பூண்டு உயிர்களுக்கு இரங்கும் திருவின் மணாளன் 

பக்தவத்ஸல: -- தானீன்ற கன்றின் அழுக்குகக்கும் பசு போன்று ஜீவர்கள் பால் தாய்மை மிக்கவன் 

***

No comments:

Post a Comment