Friday, December 10, 2021

ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்

ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம் ஸ்துத: ஸ்தோதா ரணப்ரிய: | 
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்திரநாமய: || 


ஸ்தவ்ய: -- வாக்கினால் செய்யப்படும் கைங்கரியமான துதி என்பதற்கு முற்றிலும், எக்காலத்தும், மாறாத நல்ல இலக்கு அவரே 

ஸ்தவப்ரிய: -- பக்தர்களின் உண்மையான உள்ளத்தைப் பார்க்கின்ற காரணத்தால் எவ்வளவு எளியோர் துதித்தாலும் அதில் உவப்பு கொள்கின்றவர் 

ஸ்தோத்ரம் -- உலகில் கருத்திழந்து உலழும் ஜீவர்களுக்குத் தம்மைத் துதிக்கும் எண்ணத்தையும் தந்து அந்தத் துதியாகவும் தாமே இருக்கிறார் 

ஸ்துத: -- என்றென்றும் அவரே துதிகப்படுகின்றவராக இருக்கின்றார் 

ஸ்தோதா -- தம்மைத் துதிப்பவரை உலகில் துதிகப்படுகின்றவராகவும், மெய்ப்புகழ் வாய்ந்தவராகவும் ஆக்குகின்றார் 

ரணப்ரிய: -- உலகில் நன்மைக்கு எதிரான தீமையையும், பக்தர்களுக்குத் தீமை புரிபவரையும் எதிர்க்கும் போரைத் துதியைப் போலவே என்றும் விரும்புகின்றார் 

பூர்ண: -- தாம் என்றும் நிறைந்தவரும், எதையும் வேண்டாதவருமாக இருந்தாலும் பக்தர்கள் உள்ளம் உருகிச் செய்யும் துதியை விரும்புகிறார் 

பூரயிதா -- அவ்வாறு பூர்ணராக இருந்தாலும் பக்தர்களின் துதிகளை விரும்பும் காரணம் அவர்களுடைய பிரார்த்தனைகளை பூர்த்தி ஆக்குவதற்கேயாம் 

புண்ய: -- பாபிகளும் அவரைத் துதிப்பதால் பாபம் நீங்கிப் புண்யம் வாய்ந்தவராய் ஆகின்றனர் 

புண்யகீர்த்தி: -- பாபத்தை நீக்கிப் புண்யத்தைத் தரும் கீர்த்தியுடையவை அவருடைய நாமங்கள் 

அநாமய: -- மிகக் கொடிய வியாதியானதும், ஞானத்தையே போக்கிவிடுவதுமான உலகியல் என்பதையே நீக்குவது நாவால் அவருடைய திருநாமத்தைத் தீண்டலே ஆகும் 

***

No comments:

Post a Comment