Friday, October 29, 2021

இஷ்டோSவிசிஷ்ட:

இஷ்டோSவிசிஷ்ட: சிஷ்டேஷ்ட: சிக2ண்டீ3 நஹுஷோ வ்ருஷ: | 
க்ரோத4ஹா க்ரோத4க்ருத் கர்த்தா விச்வபா3ஹுர் மஹீத4ர: || 

*

இஷ்டோSவிசிஷ்ட: - பிரளயகாலத்தில் ஏதொன்றும் பிதிர்கதிர்படாமல் தம் வயிற்றில் வைத்துக் காக்கும் அளவிற்கு அனைத்திலும் தாய் போல் ஒத்த அன்புடையவர் ஆகையாலே இஷ்டோSவிசிஷ்ட:

சிஷ்டேஷ்ட: - மார்கண்டேயர் முதலிய மஹரிஷிகளாலும் மிகவும் விருப்பமுடன் போற்றப்படுபவர் ஆகையாலே சிஷ்டேஷ்ட:

சிகண்டீ - அளவிலாத அனைத்தினும் உயர்ந்த ஐஸ்வர்யமாகிற மகிமையைத் தமது தலையில் மயிலிறகாய் அணிபவர் ஆகையாலே சிகண்டீ

நஹுஷ: - தமது மாயையால் ஜீவர்களைக் கட்டுகிறவர் ஆகையாலே நஹுஷ: (ணஹ் பந்தனே - இலக்கணக் குறிப்பு)

வ்ருஷ: - தர்மத்தின் உருவமாகி மக்களின் ஆசைகளை பூர்த்தி செய்பவர் ஆகையாலும், ஸம்ஸாரக் கடலில் அலைந்து வருந்தும் சாதுக்களின் வருத்தத்தை நீக்கி பரமானந்தத்தை ஏற்படுத்தும் மழையாக இருப்பவர் ஆதலாலும் வ்ருஷ:

க்ரோதஹா - சாதுக்களுக்கு நேரும் தீமையை அழித்த பின்பே தம் குரோதம் நீங்குபவர்

க்ரோதக்ருத் - தீமையை எதிர்த்து எழும் நியாயமான குரோதத்தைச் செய்பவர்

கர்த்தா - தீமைக்குத் தக்க தண்டனைகளை வழங்குபவர்

விச்வபாஹு: - தீமைக்கு எதிராக உயர்த்தும் தர்மத்தின் கைகள் உலகமெங்கும் முளைத்தது போன்று எழும் அளவற்ற தோள்கள் உடையவர். (தோள்கள் ஆயிரத்தாய் - ஆழ்வார்)

மஹீதர: - உலகத்தைத் தாங்கும் உன்னத ஆதாரமாய் இருப்பவர்.

***

No comments:

Post a Comment