Friday, October 29, 2021

ஸுபு4ஜோ து3ர்த4ரோ வாக்3மீ

ஸுபு4ஜோ து3ர்த4ரோ வாக்3மீ மஹேந்த்3ரோ வஸுதோ3 வஸு: | 
நைகரூபோ ப்3ருஹத்3ரூப; சிபிவிஷ்ட: ப்ரகாந: || 



ஸுபுஜ: - சரணாகதி அடைந்தவர்களைக் கரையேற்றுவதிலும், காத்து ரக்ஷிப்பதிலும் மும்முரமாகவும், தவறாமலும் இருக்கும் கைகளை உடையவர் ஆதலாலே ஸுபுஜ: 

துர்தர: - அவ்வாறு கரையேற்றும் போதும், காக்கும் போதும் எதனாலும், சரணாகதி அடைந்தவர்களாலுமே மீற முடியாத திருக்கரங்கள் ஆகையாலே துர்தர: 

வாக்மீ - அவ்வாறு தம்மைச் சரணடைந்தவர்களைத் தவறாமல் காப்பாற்றுவேன் என்று அவதாரங்கள் தோறும் ஜீவர்களுக்கு நிச்சயமான வாக்கு தந்திருப்பவர் ஆகையாலே வாக்மீ 

மஹேந்த்ர: - சர்வ உலகங்களும் சேர்ந்தாலும் ஒரு சிறு பிடி என்னும் அளவிற்கு அளவிலா ஐஸ்வரியம் உடையவர் ஆகையாலே மஹேந்த்ர: 

வஸுத: - அல்பம், அஸ்திரமான செல்வங்களைக் கேட்பவர்களுக்கு அவற்றைத் தருபவர் ஆயினும், அருஞ்செல்வம் ஆகிய தம் தாளிணைகளையே வேண்டுபவர்க்கு அந்த மிக்க பெரும் செல்வத்தை மிக உவந்து தருபவர் ஆகையாலே வஸுத: 

வஸு: - உவந்து தரும் அரும் பெரும் செல்வமும் தாமேவாக இருப்பதால் அவரே வஸு: 

இனி விச்வரூபம் சொல்லப் படுகிறது - 

நைகரூப: - அவரவர் தமதமது அறிவறி வகைவகை அவரவர்க்கு அருள்பாலிக்க வேண்டி பல ரூபங்களை எடுப்பவர் ஆகையாலே நைகரூப: 

ப்ருஹத்ரூப: - தாம் எவ்வுருவம் எடுப்பினும் அதுவே அனைத்துமாக ஆகும் வண்ணம் விரிந்த ரூபம் ஆகையாலே ப்ருஹத்ரூப: 

சிபிவிஷ்ட: - யக்ஞ மயமாகவே தாம் இருப்பதாலும், ஒளியின் கிரணங்களாகிய தம்மிடமிருந்து கிரணங்களாக வெளிப்போந்த ஜீவர்கள், பொருட்கள் அனைத்திலும் உள் புகுந்து நிலவும் மூர்த்தி ஆகையாலே சிபிவிஷ்ட: 

ப்ரகாசந: - இவ்வாறு ஒளியுருவாய் உலவும் மூர்த்தி ஆயினும் அவரே காட்டினாலன்றி காண இயலா பேரொளி உருவர் ஆகையாலே, பக்தர்கள் விரும்பிக் கேட்கில் தம் உண்மை உருவைக் காட்டுபவர் ஆகையாலே ப்ரகாசந: 

***

No comments:

Post a Comment