Friday, October 29, 2021

அசோகஸ்தாரணஸ்தார:

சோகஸ்தாரணஸ்தார: சூர: சௌரி: ஜநேச்வர: |
அநுகூல: தாவர்த்த: பத்3மீ பத்3மநிபே4க்ஷண: || 



அசோக: - சோகம், மோஹம், ஜரை, ம்ருத்யு, க்ஷுத், பிபாஸை என்னும் சோகம், மோகம், மூப்பு, சாவு, பசி, தாகம், என்ற ஆறு ஊர்மிகள் (அலைகள்) ஸம்ஸார சாகரத்தின் வேகங்களாய் ஜீவர்களை நலியும் குற்றங்கள் ஆகின்றன. இந்த ஆறுக்கும் உபலக்ஷணமாகச் சொல்வது சோகம். இந்த ஆறும் இல்லாதவன் மட்டுமன்று, தம்மை அண்டியவர்களுக்கு இவை இல்லாமல் ஆக்குபவர் என்பதால் அசோக: 

தாரண: - ஸம்ஸார சாகரத்தைத் தாண்டுவதற்கு உதவும் பெருநல் உதவியாக இருப்பவர் 

தார: - பவக்கடலினின்றும் சரணடைந்தவர்களை பயமில்லாமல் அக்கரையாகிய மோக்ஷத்திற்குக் கடத்துபவர். 

சூர: - எத்தகைய இடர்ப்பாட்டிலும் தாமே மீட்பவர் ஆகையாலே சூர: 

சௌரி: - பக்தர்களை இடர்ப்பாட்டினின்றும் மீட்பதற்காகத் தாமே அவர்களை நாடிச் செல்பவர். 

ஜநேச்வர: - உயிர்கள் அனைத்தையும் வியாபிக்கும் சீலத்தால் ஜநேச்வரர் 

அனுகூல: - அனைத்துப் பொருட்களிலும் தாமே உள்ளே ஆத்மாவாக இருப்பதால் அனுகூலமாக இருப்பவர். 

சதாவர்த்த: - வீழ்ச்சிக்குப் பல சுழல்கள் உடைய பவக்கடல் போல் அன்றிக்கே தம்மிடம் பக்தியால் அகப்பட்டவர்கள் தாமே கருதினாலும் மீள முடியாத அளவிற்கு வாழ்ச்சிக்கு ஆன சுழல்கள் அளவிறந்து உடையவர். 

பத்மீ - கையில் லீலையாகிய காலப்பதுமத்தை உடையவர் 

பத்ம நிபேக்ஷண: - அன்றலர்ந்த தாமரை மலரைப் போன்ற மலர்ச்சியும், குளிர்ச்சியும் கொண்ட கடாக்ஷம் கொண்டவர். 

***

No comments:

Post a Comment