Friday, October 29, 2021

ஆவர்தனோ நிவ்ருத்தாத்மா

ஆவர்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த3ன: |
அஹ: ஸம்வர்தக்ோ வஹ்நி: அநிலோ த4ரணீத4ர: ||


*

ஆவர்தன: - ஸம்ஸாரச் சக்கிரம் நில்லாமல் உயர்வதும் தாழ்வதுமாய் வெளிப்படுவதும் மறைவதுமாய் இருக்கும்படிச் சுழற்றும் தத்துவமாக இருப்பவர் ஆகையாலே ஆவர்தன:

நிவ்ருத்தாத்மா - சுழலும் பிரபஞ்சம் தம் முழுமையில் ஏதோ ஒரு மீச்சிறு பிரதேசம் என்னலாம்படி மாறாமல் நிலைத்த ஸ்வரூபர் ஆகையாலே நிவ்ருத்தாத்மா

ஸம்வ்ருத: - தமஸினால் தம் அறிவைக் கைக்கொள்ளாதவருக்குத் தம்மைப் பிரகாசிக்காமல் மூடிக்கொள்பவர் ஆகையாலே ஸம்வ்ருத:

ஸம்ப்ரமர்தன: - அந்த தமஸ் நீங்க வேண்டும் என்று தம்மையே ப்ரார்த்திப்பவருக்கு அந்த இருளை முழுவதும் அழித்துத் தம்மைக் காட்டுபவர் ஆகையாலே ஸம்ப்ரமர்தன:

அஹஸ்ஸம்வர்த்தக: - உலகியலில் தோய்ந்தவர்களுக்கு உரிய பகல் இரவுகளையும், தம்முடைய பக்தியில் ஈடுபட்டவர்களுக்கு உரிய பகல் இரவுகளையும் நன்கு சுழட்டுபவர் ஆகையாலே அஹஸ்ஸம்வர்த்தக:

வஹ்நி: - அனைத்து பொருட்களும் இருப்பதற்கேற்ற வகையில் அனைத்தையும் தாங்குபவர் ஆகையாலே வஹ்நி:

அநில: - யாவரும் உஜ்ஜீவிக்கும்படிச் செய்யும் ஆதார சக்தியாய் இருப்பவர் ஆகையாலே அநில:

தரணீதர: - அனைத்தையும் தாங்கி நிற்பது பூமி என்றால் பூமியையும் தாங்கி நிற்கும் பரம் தத்துவம் ஆகையாலே தரணீதர:

***

1 comment:

  1. Very good effort. Very happy to read. Easy way of clear understanding of slokas. May Sri RadheKrishna bless you..

    ReplyDelete