Friday, October 29, 2021

அம்ருதாம்சூத்3ப4வோ

அம்ருதாம்சூத்3ப4வோ பா4நு: சசபி3ந்து3: ஸுரேச்வர: | 
ஔஷத4ம் ஜக3த: ஸேது: ஸத்யத4ர்மபராக்ரம: || 


அம்ருதாம்சூத்பவ: - இறப்பை நீக்கி அமரத் தன்மையைத் தரும் உன்னத நிலவொளியாக இருப்பவர் ஆகையாலே அம்ருதாம்சூத்பவ: 

பாநு: - எதற்கும் விலகாத உள்ளிருளைப் போக்கும் ஞான ஒளியாக இருப்பவர் ஆகையாலே பாநு: 

சசபிந்து: - அஞ்ஞானத்தால் தீய வழியில் போவோரைக் கடிந்து நல்வழிக்கு உய்க்கும் தண்ணொளியாக இருப்பவர் ஆகையாலே சசபிந்து: 

ஸுரேச்வர: - நல்வழியில் செல்பவர்களே தேவர்கள் என்னும்படி, அவர்களை மிக உயர்ந்த பேறான தம்முடைய உலகை அடையும் படிச் செய்பவர் ஆகையாலே ஸுரேச்வர: 

ஔஷதம் - ஸம்ஸாரம் என்னும் கொடிய பிணிக்கு மருந்தாய் இருப்பவர் ஆகையாலே ஔஷதம் 

ஜகதஸ்ஸேது: - கடக்கலாகா கொடிய ஸம்ஸாரக் கடலில் கடந்து நற்கதிக்கு உய்க்கும் அணையாக இருப்பவர் ஆகையாலே ஜகதஸ்ஸேது: 

ஸத்யதர்மபராக்ரம: - ஜீவர்கள் தம் அஞ்ஞானத்தால் நன்மையினின்றும் விலகி ஓடுபவர்கள் ஆகையாலே அவர்களாலும் கடத்தற்கரிய குணங்களும், தவறாமல் அவர்களைக் கரையேற்றும் அவதார பராக்ரமங்களும் உடையவர் ஆகையாலே ஸத்யதர்மபராக்ரம: 

***

No comments:

Post a Comment