Friday, October 29, 2021

யுகா3தி3க்ருத்

யுகா3தி3க்ருத் யுகா3வர்தோ நைகமாயோ மஹாந: | 
அத்3ருச்யோ வ்யக்தரூபச்ச ஸஹஸ்ரஜித் அநந்தஜித் || 


ஆலிலைமேல் மாயனின் ஆச்சரியமான ரூபம் தியானிக்கப் படுகிறது.

யுகாதிக்ருத் - பிரளயத்தில் அனைத்தும் முடிந்து அதனால் ஒரு நஷ்டமும் நேராதபடி மீண்டும் யுகங்களைத் தொடங்கி நடத்துகிறவர் ஆகையால் யுகாதிக்ருத்

யுகாவர்த்த: - யுகங்கள் அவற்றின் கால க்ரமங்கள், தன்மைகள் எதுவும் முறையாகத் தொடரும்படி சுழற்றுகிறவர் ஆகையால் யுகாவர்த்த:

நைகமாய: - ஆலிலைமேல் வளரும் குழந்தையாய் அநேகமான மாயைகளையும், அற்புதங்களையும் உடையவர்

மஹாசந: - பெருந்தீனிக்காரர். இவரை விட பெருந்தீனி உண்பவர்கள் இருக்க முடியாது என்னும் படி பிரளயத்தில் உலகனைத்தையும் தம் வயிற்றில் ஒடுக்குபவர்.

அத்ருச்ய: - உலகெலாம் அழிந்த பிறகு பிரளய ஜலத்தில் ஓர் ஆலிலையும், அதன் மேல் ஒரு குழந்தையும் மட்டும் எப்படி இருக்க முடியும் என்று மார்க்கண்டேயர் போன்ற மகரிஷிகளுக்கும் உண்மை புலப்படாதவர்.

வ்யக்தரூப: - 'காயம்பூ நிறமும் திருமார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் அடையாளமும் கொண்டு திருமகள் உறையும் திருமார்பனாக எப்பொழுதும் காட்சி தருகிறார்' என்று மார்கண்டேயரே சொல்லும் அளவிற்கு திவ்ய மங்கள திருமேனி கொண்டவர். யோகிகளுக்குப் புலப்படும் இதயவெளி உருவர்.

ஸஹஸ்ரஜித் - அளவற்ற விதங்களில் வெற்றி திகழ்பவர்

அநந்தஜித் - எல்லையற்ற வெற்றி உருவராய்த் திகழ்பவர்

***

1 comment:

  1. Excellent work Sri.Mohanarangan Sir.. Generations will benefit out of these..🙏🙏

    ReplyDelete