Wednesday, November 24, 2021

வேதா: ஸ்வாங்கோSஜித: க்ருஷ்ணோ

வேதா4: ஸ்வாங்கோ3Sஜித: க்ருஷ்ணோ த்3ருட4: ஸங்கர்ஷணோSச்யுத: | 
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமநா: || 


வேதா: -- பிரபஞ்சம் அனைத்தையும் அளிக்கும் பிரான் 

ஸ்வாங்க: -- படைத்தளிப்பதில் பிற உதவி எதுவும் இன்றி அளிப்பவன் 

அஜித: -- ஸ்ரீவைகுண்டமென்னும் மாற்றத்திற்கு அப்பாற்பட்ட நித்யவிபூதியில் உறைபவன் 

க்ருஷ்ண: -- கண்ணன் என்னும் கருந்தெய்வம் 

த்ருட: -- பக்தர்கள் கண்டு பழகித் தொட்டுணரும்படி அவதார வடிவுகள் எடுப்பவன் 

ஸங்கர்ஷண: அச்யுத: -- சித் அசித் என்னும் அனைத்தையும் தன்னுள் அடக்குபவன்; எந்தப் பிரளயத்தும் மாறாமல் நிலைத்து இருப்பவன் 

வருண: -- பிரபஞ்சத்தை முழுவதும் தன்னுள் அடங்க மூடியிருக்கும் பெரும் தத்துவம் அவனே 

வாருண: -- வருணன் என்னும் ஜலதத்துவத்தின் மீது கருணை கொண்டு சயனித்திருப்பவன் 

வ்ருக்ஷ: -- பக்தர்களுக்கு ஞானமும், பக்தியும், முத்தியும் ஆகிய பழங்களையும், ஸம்ஸார தாபத்தைப் போக்கிப் பகவானிடம் ஈடுபாடு ஆகிய நிழலையும் தரும் வாசுதேவன் என்னும் பெரும் மரம் அவன் 

புஷ்கராக்ஷ: -- திருக்கண் நோக்கால் தெய்விக நன்மைகளைப் பொழிபவன் 

மஹாமநா: -- பக்தர்களுக்கு எத்தனை தான் அருளினும் போதாது என்று மேலும் மேலும் அருளும் பெரும் மனம் கொண்டவன் 

***

1 comment: