Tuesday, November 23, 2021

மஹாவராஹோ கோவிந்த:

மஹாவராஹோ கோ3விந்த3: ஸுஷேண: கனகாங்க3தீ3 | 
கு3ஹ்யோ க3பீ4ரோ க3ஹநோ கு3ப்தச்சக்ர க3தா3த4ர: || 


மஹாவராஹ: -- அமிழ்ந்துபோன பூமியைக் கோட்டிடைக் கொண்டெழுந்த பெரும்வராகர் 

கோவிந்த: -- கோ என்னும் பூமியை மீட்டதால் கோவிந்தர்; கோ என்னும் வாக்கிற்குத் தலைவர் ஆகையால் கோவிந்தர்; கோ என்னும் வேதாந்த சூத்ரங்களின் ஸாரதமமான பொருளாக இருப்பவர் ஆகையாலே கோவிந்தர். 

ஸுஷேண: -- தேவகணங்களையும், பக்தகோடிகளையும் என்றும் தம்மைப் புடைசூழ இருப்பவர் ஆகையாலே ஸுஷேணர் 

கனகாங்கதீ -- பொன்னாரணிகள் கணக்கில பூண்டவர் 

குஹ்ய: -- இரகசியங்கள் எனப்படும் உபநிஷதங்களால் விளக்கப்படுபவர்; இதய குகையில் என்றும் இருப்பவர் 

கபீர: -- உலக அறிவால் என்றும் அறியவியலாத, எல்லையற்ற, என்றும் உபநிஷதங்கள் மூலமாகவே அறியக் கூடிய கல்யாண குணங்களை உடையவர் 

கஹந: -- ஆழம் காண இயலாத் தன்மையர்; மூன்று அவஸ்தைகளிலும் அளவுபடாமல் இருப்பவர் 

குப்த: -- மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத இயல்பை உடையவர் 

சக்ரகதாதர: -- மனம், புத்தி ஆகியவற்றிற்கு எட்டாதவர் ஆயினும் மனம், புத்தி ஆகிய தத்துவங்களையே சக்ரம், கதை என்னும் ஆயுதங்களாகத் தரிப்பவர் 

***

No comments:

Post a Comment