Friday, November 12, 2021

ஸ்வாபநஸ்ஸ்வவசோ வ்யாபீ

ஸ்வாபநஸ்ஸ்வவசோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத் | 
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்நக3ர்போ4 த4நேச்வர: || 


ஸ்வாபந: -- தம் சௌந்தர்யத்தால் ஜீவர்களைக் கவர்ந்து நல்வழியில் நடத்துபவர்; அறிதுயில் அழகர் 

ஸ்வவச: -- என்றும் தம் நிலையில் பெயராதவர் 

வ்யாபீ -- அனைத்திலும் அந்தர்யாமியாய் நீக்கமற வியாபித்தவர் 

நைகாத்மா -- அனைத்து ஆத்மாக்களிலும் அந்தராத்மாவாய் விளங்கும் பரமாத்மா அவரே 

நைககர்மக்ருத் -- பிரபஞ்சத்தின் பல செயல்களையும் தாம் செய்தவண்ணம் இருப்பவர் 

வத்ஸர: -- ஜீவர்களின் இதயத்தில் மேவியுறைந்து அவர்களை உயர்ந்த இலட்சியத்தின்பால் உய்ப்பவர் 

வத்ஸல: -- சரணடைந்தோரைக் கன்றைத் தாய்ப்பசு காப்பதைப் போலக் கனிந்து காப்பவர் 

வத்ஸீ -- அத்தனை உயிர்களையும் தம் கன்றுகள் போல் கருதுபவர் 

ரத்நகர்ப: -- அனைத்து உயிர்களுக்கும் அனைத்து வளங்களையும் இடையறாது கொடுக்கும் பெருவளம் மிக்கவர் 

தநேச்வர: -- தம் குழந்தைகளுக்கு ஐஸ்வர்யங்களை விரைந்து அருளும் தந்தை அவரே 

***

No comments:

Post a Comment