Friday, November 5, 2021

வைகுண்ட: புருஷ: ப்ராண:

வைகுண்ட2: புருஷ: ப்ராண: ப்ராணத3: ப்ரணவ: ப்ருது2: | 
ஹிரண்யக3ர்ப4ச் த்ருக்4நோ வ்யாப்தோ வாயுரதோ4க்ஷஜ: || 


வைகுண்ட: -- குறுக்கம், எல்லை முதலியன அற்றவர்; தம்பால் அனைத்தையும் ஈர்த்து வைப்பவர் 

புருஷ: -- அந்தர்யாமியாய் நின்று ஜீவர்களின் பாபங்களைப் பொசுக்கித் தூய்மை நல்குபவர் 

ப்ராண: -- மோக்ஷத்திற்காக அனைவருக்கும் வாழ்வு நல்குபவர் 

ப்ராணத: -- சோர்ந்து போகும் ஜீவர்களுக்குப் புத்துயிரூட்டி முத்திவழியில் தூண்டுபவர் 

ப்ரணவ: -- வேதங்களிலேயே பரம்பொருளுக்கான மிகச்சிறந்த ஸ்துதியாக இருக்கும் ப்ரணவமாக இருப்பவர் 

ப்ருது: -- எல்லையற்று விரியும் மஹிமையுடையவர் 

ஹிரண்யகர்ப: -- திவ்யமான சௌந்தர்யத்துடன் இதய கர்ப்பத்தில் குடிகொண்டிருப்பவர் 

சத்ருக்ந: -- இதயத்தில் எழுந்தருளியிருந்து காமம், குரோதம், லோபம் முதலிய ஆறு சத்ருக்களையும் அழிப்பவர் 

வ்யாப்த: -- அத்தனை உயிர்களின் இதயத்திலும் இருந்து தந்தை தம் மக்களைக் காப்பது போல் காப்பவர் 

வாயு; -- காற்று போல் தாமே அனைவர்பாலும் சென்று வாழ்விப்பவர் 

அதோக்ஷஜ: -- ஆரா அமுதாய்ப் பெருகும் ஆனந்தர் 

***

No comments:

Post a Comment