Monday, November 1, 2021

உத்பவ: க்ஷோபணோ தேவ:

உத்3ப4வ: க்ஷோப4ணோ தே3வ: ஸ்ரீக3ர்ப4: பரமேச்வர: | 
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா க3ஹனோ கு3ஹ: || 


உத்பவ: -- பவக்கடலில் இருந்து பக்தர்களை விடுவிப்பவர்; அவருடைய அவதார லீலைகளை நினைப்பதால் ஸம்ஸாரபந்தம் விடுபடுகிறது. 

க்ஷோபண: -- நல்வழியில் செல்லாதோரை நடுங்கச் செய்பவர்; படைப்பிற்கு முன்னர் இருந்த ப்ரக்ருதியைக் கலக்கிச் சிருஷ்டியை வெளிப்படச் செய்பவர் 

தேவ: -- அனைத்தின் உள்ளுயிராய் ஒளிர்பவர்; மாயையில் ஜீவர்களைக் கட்டி விளையாடுபவர் 

ஸ்ரீகர்ப: -- படைப்பின் எந்நேரத்திலும் தம்மோடு பிரியாமல் திருமகள் திகழ நிற்பவர் 

பரமேச்வர: -- உயர்வற உயர்நலம் உடையவராய்த் திகழும் திருமால் அவரே 

கரணம் -- தம்மை அடையத் தாமே தகுந்த துணையாக இருப்பவர் 

காரணம் -- அனைத்துவித காரணமாகவும் அவரே திகழ்பவர் 

கர்த்தா -- காரணம் கொண்டு இயற்றும் ஆக்குவோனாகவும் அவரே திகழ்கிறார் 

விகர்த்தா -- விசித்திரமான படைப்பை இயற்றுபவர்; பக்தர்களின் ஆனந்தம், துயரங்களைத் தம்முடையதாகக் கருதுபவர் 

கஹந: -- நம் புலனுக்கும் கருத்திற்கும் புலப்படா மஹிமை உடையவர்; பக்தர்களிடம் அவர் கொள்ளும் அன்பை நம்மால் புரிந்துகொள்ள இயலாது இருப்பவர் 

குஹ: -- ஜீவர்களிடத்தில் அவர்களே அறியாமல் அவர்தம் இதய குகையில் வீற்றுக் காப்பவர் 

***

2 comments: