Sunday, November 21, 2021

அஜோ மஹார்ஹ: ஸ்வாபாவ்யோ

அஜோமஹார்ஹ: ஸ்வாபா4வ்யோ ஜிதாமித்ர; ப்ரமோத3ந: | 
ஆநந்தோ3 நந்த3நோ நந்த3: ஸத்யத4ர்மா த்ரிவிக்ரம: || 


அஜ: -- உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து அனைத்துக்கும் அடிப்படையாய், முதன்முன்னம் தானே தோன்றும் அகாரம் போன்று, வடமொழி எழுத்துக்களை வரிசையாக எழுதினால் முதல் 24 எழுத்துக்களால் குறிக்கப்படும் பிரகிருதி தத்துவங்களுக்குள்ளும், பின்னர் 25 ஆவது எழுத்தான மகாரத்தால் குறிப்பிடப்படும் ஜீவதத்துவத்திற்குள்ளும் உள்ளுயிராய் நின்று காப்பதால், அகாரத்தின் பொருளாக நமக்குக் காட்சியளிப்பதால் அவர் அஜ: 

மஹார்ஹ: -- ஜீவர்கள் தம்மை அர்ப்பணிக்கத் தகுந்த புகல் அவரே 

ஸ்வாபாவ்ய: -- ஜீவர்களால் தமக்கு மிகவும் இயல்பாக உரிமை பூண்ட பிரபுவாகப் பக்தி செலுத்தத் தகுந்தவர் 

ஜிதாமித்ர: -- தம்மைச் சரணடைந்தோரைக் காமம் முதலிய அகப்பகையை வெல்லுபடிச் செய்பவர் 

ப்ரமோதந: -- தம்மிடம் பக்தி செலுத்தும் அடியார்களின் ஆத்ம சாதனத்தில் பெரும் ஆநந்தத்தைப் பெருகச் செய்பவர் 

ஆநந்த: -- கபிலாவதாரம் போன்று ஆநந்தமே வடிவானவர் 

நந்தந: -- பிரம்மானந்தத்தைத் தருபவர் 

நந்த: -- நித்யவிபூதியில் வந்தடைந்த ஜீவர்களுக்கு அளவிலா ஆனந்தம் அளிப்பதால் பெருகும் ஆநந்தம் மிகுபவர் 

ஸத்யதர்ம: -- மாறாத நிலைத்த ஞானம், ஆனந்தமே நிலையான ஸ்வரூபமாகக் கொண்டு பக்தர்களின் உண்மையான பக்திக்கு என்றும் உறுதுணையாய் நிற்பவர் 

த்ரிவிக்ரம: -- த்ரி என்பதே மூன்று வேதங்களையும் குறிக்கும் ஒரே பெயராகவும் ரிஷிகள் கூறுவதின்படி வேதத்தின் ஊடு எங்கும் தாத்பர்யமாகப் பரவி நிற்பவர் 

***

No comments:

Post a Comment